சிறுத்தையை சுருக்கு வைத்துக் கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை

நீலகிரி, ஜனவரி 05

கோத்தகிரி பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக்கு சுருக்கு கயிறு வைத்து கொன்றவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று சிறுத்தை ஒன்று மர்மமாக உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வனச்சரகர் சீனிவாசன், கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் இறந்து போனது 7 வயது மதிக்கத்தக்கப் பெண் சிறுத்தை எனவும், சுருக்கு வைத்து கொன்றதையும் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கப்பிள்ளை என்பவரது மகன் ராஜன் (40) என்பவரிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை சுருக்கு வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர், இது குறித்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தற்போது நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...