உதகையில் விபத்துகளை தடுக்க காவல் துறையினருக்கு வேகத்தை அளக்கும் கருவி

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி ஜனவரி 05

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுதலால் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிவேகத்தைக் கண்காணிக்கவும், கணக்கிடவும் வேகத்தை அளக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், வாகன ஓட்டிகள் நகர்புறத்தில் மற்றும் நெடுஞ்சாலையில் நிர்ணயித்த வேகத்தைக் காட்டிலும் அதிகமாக 10 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ. 300-ம், அதற்கு மேல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ. 400-ம், மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1000-ம் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக எடை ஏற்றுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...