ஜெயலலிதா மரணம் விவகாரம் : ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜனவரி 05

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலிதாவின் உறவினர்கள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தின் சம்மனை ஏற்று, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில் விசாரணை ஆணையம் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் மேலும் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், வரும் 11-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...