20 சதவிகித வளர்ச்சியை எட்டிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்- தலைவர் பெருமிதம்

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 05

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.14,000 கோடியாக இருந்த வணிகம் இந்த ஆண்டில் ரூ.16,800 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான இந்திய அளவிலான வணிகம் 26 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொதுமக்களிடையே காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும் அளவு அதிகரித்துள்ளதின் காரணமாக இன்னும் சில காலத்துக்கு மேலும் கூடுதலான வணிக வளர்ச்சியை எட்ட முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் கோடி வணிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டமொன்றை வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நான்கு கோடி பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான பிரீமியம் தொகை ரூ.1,200 கோடியாகும்.

வாடிக்கையாளர்களின் மேலான ஒத்துழைப்பின் காரணமாக இந்நிறுவனம் பொதுக் காப்பீட்டுத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பீடு செய்துள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சமீபத்தில் டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தையும் காப்பீடு செய்திருக்கிறது.

செப்டம்பர் 2017ல் முடிவடைந்த முதல் அரையாண்டில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ரூ.1,248 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 161 சதவிகிதம் அதிகமாகும். 2,24 அளவிலான கடன் தீர்க்கும் சக்தியுடனும் ரூ.3,7000 கோடி நிகர மதிப்பிலான சொத்துக்களுடனும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் உறுதியான நிறுவனமாக விளங்குகிறது".

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை குறிச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையை ஜி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். விழாவில் தலைமை மண்டல மேலாளர் என். வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...