கோவையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 05

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...