அரசு கட்டணத்திற்கு எதிராக தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்துடன் இயங்கும் ஆட்டோக்கள்

ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.

கோவை, ஜனவரி 04

ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர். 

கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ. 25 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நிர்ணயித்தது. இக்கட்டணத்திற்கு எதிராக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தன்னிச்சையாக கூடுதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். குறைந்தபட்சம் ரூ. 30 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 15 எனவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்து ஆட்டோக்களை இன்று முதல் இயக்கத் துவக்கினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்ததால் தொழிற்சங்கங்களே கட்டணத்தை உயர்த்தியதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கட்டண நிர்ணயித்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், கட்டண உயர்வை கடைபிடிக்கும் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...