ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
கோவை, ஜனவரி 04
ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ. 25 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நிர்ணயித்தது. இக்கட்டணத்திற்கு எதிராக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தன்னிச்சையாக கூடுதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். குறைந்தபட்சம் ரூ. 30 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 15 எனவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்து ஆட்டோக்களை இன்று முதல் இயக்கத் துவக்கினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்ததால் தொழிற்சங்கங்களே கட்டணத்தை உயர்த்தியதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கட்டண நிர்ணயித்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், கட்டண உயர்வை கடைபிடிக்கும் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.
ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ. 25 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நிர்ணயித்தது. இக்கட்டணத்திற்கு எதிராக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தன்னிச்சையாக கூடுதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். குறைந்தபட்சம் ரூ. 30 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 15 எனவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்து ஆட்டோக்களை இன்று முதல் இயக்கத் துவக்கினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்ததால் தொழிற்சங்கங்களே கட்டணத்தை உயர்த்தியதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கட்டண நிர்ணயித்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், கட்டண உயர்வை கடைபிடிக்கும் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.