மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் டிப்பர் லாரி மோதி விபத்து : 40 ஆடுகள் பலி

கோவை, ஜனவரி 04

கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன்  ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன. 

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...