கோவை, ஜனவரி 04
கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன.
இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன.
இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.