மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் டிப்பர் லாரி மோதி விபத்து : 40 ஆடுகள் பலி

கோவை, ஜனவரி 04

கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன்  ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன. 

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...