ஆஷஸ் கடைசி டெஸ்ட் : ரூட்-டின் சிறப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது இங்கிலாந்து

ஜனவரி 04

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை இழந்தபோதும், கேப்டன் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தினால் சரிவில் இருந்து மீண்டது.

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஸ்டோன்மேன் 24 ரன்னிலும், பின்சி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மற்றொரு தொடக்க விரர் அலிஸ்டயர் கூக் இன்னும் 47 ரன் எடுத்தால் 12 ஆயிரம் ரன் கடப்பார் என்ற நிலையில் விளையாடினார். ஆனால் அவர் 39 ரன்னில் ஆவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னாக இருந்தது. அதன்பின்னர் ஜோ ரூட்டுடன், மலன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடியதுடன் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரூட் அரை சதம் கடந்தார். மலனும் அரை சதத்தை நெருங்கினார். இவர்கள் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அணியின் ஸ்கோரும் 200 ரன்னைத் தாண்டியது.

இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், சதம் அடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூட் 83 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட்டானர். இதைத்தொடர்ந்து, மாலனுடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். 5 ரன்னில் பேர்ஸ்டோவ் அவுட்டான நிலையில், முதல்நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. மாலன் 55 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...