ரஜினியின் புதிய கட்சிக்கு அதிமுக அமைச்சர் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 03:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, புயல் என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற எம்எல்ஏ கூட்டம் வழக்கமான கூட்டம்தான். சட்டமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சட்டமன்றத்திற்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கட்சி கொள்ளைகளை அறிவித்த பின்பே கருத்து கூற முடியும்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற திட்டங்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை உள்ளது. அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்ப கால பணிகள் நடைபெற்று வருகின்றது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து நீண்டகால திட்டமாக செயல்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், மெட்ரோ ரயில் திட்டமும், அவினாசி சாலை பாலம் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். ஆர்.கே.நகரில் குடிநீரில் கழிவுகள் கலந்து வருவதாக டிடிவி தினகரன் புகார் தெரிவித்ததாகத் தகவல் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...