ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முழு வீடியோ ஆதாரங்களை டிடிவி. தினகரன் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20ம் தேதி டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டே பழச்சாறு குடிப்பது போன்ற 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையத்தில் இருந்து வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் வீடியோவை ஒப்படைத்தனர். 

இதனிடையே, கடந்த 22ம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் பிரீத்தா ரெட்டிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோன்று, கடந்த 26ம் தேதி ஜெயலலிதா வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியது. அவருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்களை பென் டிரைவில் பதிவு செய்து நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார். 

பின்னர் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து கடந்த 28ம் தேதி டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேரில் ஆஜராகி பென் டிரைவ் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளேன். அந்த பென் டிரைவில் உள்ள வீடியோவை நீதிபதி பார்த்தார். அதில் இருக்கிற பதிவுகளை அவர் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தார். 

அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வீடியோ பதிவு இருந்ததை தாக்கல் செய்துள்ளோம். வெற்றிவேல் தாக்கல் செய்த வீடியோவை தவிர மற்ற வீடியோக்களை ஒப்படைத்து இருக்கிறோம். என்றார்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...