ஜெயலலிதா உடலை எம்பால்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் 10 நாளில் விளக்கம் அளிக்கவும், சசிகலா 15 நாளில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த சென்னை மருத்துவக் கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன் ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, மருத்துவர் சுதா சேஷய்யன், எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்பல்லோ மருத்துவர் சத்யபாமா நாளை (ஜனவரி 4-ந் தேதி) ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது கன்னத்தில் சிறிய அளவில் நான்கு துவாரங்கள் காணப்பட்டன. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல நாட்களுக்கு முன்னதாகவே ஜெயலலிதா இறந்துவிட்டதால் உடல் எம்பால்மிங் முறையில் பதப்படுத்தியிருப்பதாக பேசப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த மருத்துவர் சுதா சேஷய்யன், தட்பவெட்ப சூழல் காரணமாக உடல் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஜெயலலிதா இறந்தபின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...