கோவை, ஜனவரி 3
புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக கோவை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில், ஏ320 மற்றும் பி737 ரக 21 விமானங்களும், ஏடிஆர் ரக 14 விமானங்களும் ஒரே நாளில் தங்களது சேவையை அளித்திருந்தது அதிகபட்சமாகும். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை கோவை விமான நிலையம் வழங்கியுள்ளது.
அன்றைய தினம், 12 இண்டிகோ நிறுவன விமானங்களும், 10 ஜெட் ஏர்வேஸ் விமானங்களும், 7 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பை விமானங்களும், வெளிநாட்டிற்கு செல்லும் ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் மற்றும் சில்க் ஏர்விமானங்களும் தரையிறங்கின. இதில், உள்நாட்டு விமானங்களில் 4,374 பயணிகளும், வெளிநாட்டு விமானங்களில் 510 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இதேபோல, 35 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதன்மூலம், ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய பெருமையை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது. அன்றைய நாளில் 9,500 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விமான நிலையம் அதிகாரி கூறுகையில், கோவை விமான நிலையம் வரும் காலத்தில் மிகவும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். நாட்டில் உள்ள விமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை கோவை விமான நிலையம் உருவாக்கும். இந்த ஆண்டு சிறந்த விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக கோவை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில், ஏ320 மற்றும் பி737 ரக 21 விமானங்களும், ஏடிஆர் ரக 14 விமானங்களும் ஒரே நாளில் தங்களது சேவையை அளித்திருந்தது அதிகபட்சமாகும். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை கோவை விமான நிலையம் வழங்கியுள்ளது.
அன்றைய தினம், 12 இண்டிகோ நிறுவன விமானங்களும், 10 ஜெட் ஏர்வேஸ் விமானங்களும், 7 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பை விமானங்களும், வெளிநாட்டிற்கு செல்லும் ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் மற்றும் சில்க் ஏர்விமானங்களும் தரையிறங்கின. இதில், உள்நாட்டு விமானங்களில் 4,374 பயணிகளும், வெளிநாட்டு விமானங்களில் 510 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இதேபோல, 35 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதன்மூலம், ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய பெருமையை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது. அன்றைய நாளில் 9,500 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விமான நிலையம் அதிகாரி கூறுகையில், கோவை விமான நிலையம் வரும் காலத்தில் மிகவும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். நாட்டில் உள்ள விமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை கோவை விமான நிலையம் உருவாக்கும். இந்த ஆண்டு சிறந்த விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.