ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய கோவை விமான நிலையம்

கோவை, ஜனவரி 3

புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக கோவை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில், ஏ320 மற்றும் பி737 ரக 21 விமானங்களும், ஏடிஆர் ரக 14 விமானங்களும் ஒரே நாளில் தங்களது சேவையை அளித்திருந்தது அதிகபட்சமாகும். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை கோவை விமான நிலையம் வழங்கியுள்ளது.

அன்றைய தினம், 12 இண்டிகோ நிறுவன விமானங்களும், 10 ஜெட் ஏர்வேஸ் விமானங்களும், 7 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பை விமானங்களும், வெளிநாட்டிற்கு செல்லும் ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் மற்றும் சில்க் ஏர்விமானங்களும் தரையிறங்கின. இதில், உள்நாட்டு விமானங்களில் 4,374 பயணிகளும், வெளிநாட்டு விமானங்களில் 510 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இதேபோல, 35 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதன்மூலம், ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய பெருமையை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது. அன்றைய நாளில் 9,500 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமான நிலையம் அதிகாரி கூறுகையில், கோவை விமான நிலையம் வரும் காலத்தில் மிகவும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். நாட்டில் உள்ள விமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை கோவை விமான நிலையம் உருவாக்கும். இந்த ஆண்டு சிறந்த விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...