ப்ரோஷோன் மாலில் ஜன., 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் ”அங்காடி-18” மாபெரும் ஷாப்பிங் திருவிழா

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் வரும் 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்குகிறது.

கோவை, ஜனவரி 3

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் வரும் 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்குகிறது.

கேசிடி மேலாண்மைத் துறை மாணவர்களால் அனைத்து தொழில் மேலாண்மையியல் மாணவர்களுக்காகவும் நடத்தப்படும் விற்பனைத் திருவிழாவே அங்காடி-18 ஆகும். இது ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் ஸ்வாரஸ்யமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டும் தளமாகவும், சுயதொழில் செய்வதன் சாதக, பாதகங்களின் அனுபவ அறிவைப் பெற்று, அதன் மூலம் வியாபார யுக்திகளால் லாபம் ஈட்டும் களமாகவும் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்காடி-18-ஆனது பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன் கொணர் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருட்கள், உடைகள், அணி மணிகள், வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலதரப்பட்டவற்றின் விற்பனை நிலையமாக 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இங்கு வெவ்வேறு பிஸினஸ் பள்ளி (BUSINESS SCHOOL) மாணவர்கள் பங்கெடுப்பதால், அவர்கள் தங்களது வியாபார யுக்திகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் அங்காடி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

கேசிடி மேலாண்மைத் துறை என்பது குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஒரு அங்கமாகவும், சமூக அக்கறை கொண்ட தொழில் முனைவோர்களையும், முன்னோடிகளையும் உற்பத்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. இந்நாள்வரை குமரகுரு கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே நடைபெற்ற அங்காடி நிகழ்வானது, முதன்முறையாக கல்லூரிகளுக்கிடைப்பட்ட நிகழ்வாக, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கோவை ப்ரோஷோன் மாலில் நடைபெற உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அங்கேயே பெரிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான 75 விற்பனையகங்கள் மூலம் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு, தொழில் முனையத் தேவையான திறன்களை ஊட்டி, வியாபார நேர்த்திகளைக் கற்பிப்பதே அங்காடி-18ன் சீரிய நோக்கமாகும்.

இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவானது மூன்று நாட்களிலும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அனுமதி அனைவருக்கும் இலவசம். இந்நிகழ்வை வருகையாளர்களுக்கு என்றென்றும் பசுமையான நினைவாக்கும் வகையில், அங்காடியானது, கோவை விழா அமைப்போடு கைகோர்த்து செயலாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...