இந்திய மருத்துவ கவுன்சில் விவகாரம் : போராட்டத்தை வாபஸ் பெற்றனர் மருத்துவர்கள்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

கோவை, ஜனவரி 2

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அவசர சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது.

கோவையில் மட்டும் இன்று 5000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை கோவை அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு  செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் , மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு இன்று அறிவித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

அகில இந்திய மருத்துவ சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...