நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, ஜனவரி 02

நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க சட்ட அனுமதியும், அதற்குரிய அரசு ஆணையையும் தமிழக அரசு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே ”கோவை நீரா” என்ற பெயரில் பானம் தயாரித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் கொண்ட குழுவினர் முறையாக அனுமதி பெற்று, விற்பனை நடத்த ஆலோசனை வழங்கியதோடு அரசு ஆணையையும் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, அரசு ஆணையில் ரூ. 3 கோடி முதல் ரூ. 12 கோடி வரை நீரா பானம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் விவசாயிகள் நீரா பானத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே, அரசு தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, அதற்கு உண்டான தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், தங்களுக்கு நீரா பானம் இறக்குவது, விற்பனை சம்பந்தமான விதிகள் உரிமம் பெறும் முறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவும், நீரா உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தேவையான முதலீட்டுத் தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...