நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, ஜனவரி 02

நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க சட்ட அனுமதியும், அதற்குரிய அரசு ஆணையையும் தமிழக அரசு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே ”கோவை நீரா” என்ற பெயரில் பானம் தயாரித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் கொண்ட குழுவினர் முறையாக அனுமதி பெற்று, விற்பனை நடத்த ஆலோசனை வழங்கியதோடு அரசு ஆணையையும் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, அரசு ஆணையில் ரூ. 3 கோடி முதல் ரூ. 12 கோடி வரை நீரா பானம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் விவசாயிகள் நீரா பானத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே, அரசு தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, அதற்கு உண்டான தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், தங்களுக்கு நீரா பானம் இறக்குவது, விற்பனை சம்பந்தமான விதிகள் உரிமம் பெறும் முறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவும், நீரா உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தேவையான முதலீட்டுத் தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...