அபராதம் இல்லை..! அடி இல்லை..! மகிழ்ச்சி மட்டுமே : போலீசாருடன் புத்தாண்டு கொண்டாடிய கோவை மக்கள்


கோவை, ஜனவரி.1 :- 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வாலிபர்களை பிடித்த போலீசார் அவர்களுடனேயே புத்தாண்டு கொண்டாடியது கோவை மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கோவையில் பஞ்சமே இல்லை. 

மாநகரின் பெரும்பாலான இடங்களில் தார் சாலைகளே தெரியாத அளவிற்கு வாகனங்களும், மக்கள் கூட்டமும் அலை மோதும்.

அவ்வாறே இந்த ஆண்டும் மக்கள் மகிழ்ச்சியுற புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். 

கோவையில் வழக்கமாக இரவு ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி வழங்குவர். 

அதன்பிறகு சாலையில் கூப்பாடு போட்டு சுற்றித்திரியும் வாலிபர்களை லத்தியால் அடித்து விரட்டும் பணி மேற்கொள்ளப்படும்

கடந்த 2016-ம் ஆண்டில் கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சற்றே மாறுதல் ஏற்பட்டது. 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவருபவர்களை பிடித்து அபராதம் விதிக்காமல், அவர்களை போலீசார் அமைத்த பந்தல்களின் கீழ் அமர வைத்து, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடி, பின்னர் போதை தெளிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை அப்போதைய மாநகர போக்குவரத்து துணை ஆணையர் S. சரவணன் அறிமுகப்படுத்தினார். 

இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் ஒரு மணிக்கு மேல் போதையில் சுற்றிரித்திரியும் வாலிபர்களை பிடித்து அபராதம் விதித்தோ, அல்லது அடித்து விரட்டும் வழக்கத்தையோ போலீசார் கைவிடவில்லை.

புத்தாண்டு தினத்தில் போலீசாரிடம் அடி வாங்கியபின், வாழ்கையிலேயே அடிவிழுந்துவிட்டது போல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அடுத்தநாள் வழக்கம் போல தனது வாழ்க்கையை  கவனித்து வந்தனர் இளைஞர்கள்.

ஆனால், இந்தாண்டு புத்தாண்டு கோவை இளைஞர்களை மகிழச் செய்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்த வாலிபர்களை பிடித்த போலீசார், மாநகரின்  பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 22 பந்தல்களில் கீழ் அவர்களை அமரவைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

பந்தல்களின் கீழ் மது போதையில் பிதற்றிக்கொண்டிருந்த வாலிபர்களிடம் சற்றும் முகம் சுழிக்காமல், 'இன்னிக்கு போலீசா பேசல, உன் பிரண்டா சொல்றேன், பேசாம உக்காருப்பா' என்று கனிவுடன் பேசிய பெண் காவலர்களையும் காண முடிந்தது.

குத்துப்பாட்டு, ஆட்டம் கொண்டாட்டம் என ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதைப் போலவே அங்கு போதையில் கொண்டாடிக்கொண்டிருந்த  வாலிபர்கள் உணர்ந்திருக்க வேண்டும். 

இறுதியில், மாநகர காவல் ஆணையர் ஒவ்வொரு பந்தல்களுக்கும் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்-கை வெட்டி இளைஞர்களுக்கும், சக போலீசாருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதன் பிறகு வாலிபர்களிடம் 'மெதுவா போங்க' என்று கூறி வாகனங்களை ஓப்படைத்து அனுப்பினர் கோவை போலீசார்.

இரண்டு மணிக்கு மேல் மக்கள் கூட்டம் சற்றே குறைந்தது. இருந்த போதிலும் சிலர் கொண்டாட்டங்களை நிறுத்தவில்லை.

ஆனால், அவர்களை பிடித்து அபராதம் விதித்தோ, அடித்தோ தண்டிக்காத போலீசார், மாறாக பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாடவே இரவு முழுவதும் பணியில் இருந்தனர். 

https://m.facebook.com/story.php?story_fbid=1594239467308885&id=925853184147520

இந்த ஆண்டு கோவை மாநகர காவல்துறையின் அன்பின் போக்கிற்கு கோவை மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நன்றிகளை தெரிவித்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...