அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் : கோவை மாவட்ட கண்காணிப்பாளர்

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

கோவை, டிசம்பர் 31

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல்  நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம்  இன்று கூறினார்.

அவர் கூறுகையில் 'கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 33 காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. 

இந்த காவல் நிலையங்கள் அனைத்திலும் நூலகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பு அறைகளிலும் நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன. 

வரும் பொங்கல் தினத்தில் இருந்து செயல்பட இருக்கும் இந்த நூலகத்தில் போலீசார் மட்டுமல்லாது பொதுமக்களும் புத்தகங்களை எடுத்து படிக்கலாம். 

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக  நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.

புத்தாண்டை முன்னிட்டு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .Pa. மூர்த்தி.

நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று காலை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்களின் எண்ணிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்ட செய்திக்குறிப்புகள் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து,  செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தான் எழுதிய 'பெண்மை வாழ்க' என்ற புத்தகத்தையும், தான் படித்த சில புத்தகங்களையும் செய்தியாளர்களிடம் வழங்கியதோடு, புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள கூறி புத்தாண்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...