கோவை, டிசம்பர் 31
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
சுமார் 22 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிக்கட்சி துவங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னதாக வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற கொடியுடன் ஊர்வலமாக வந்த ரசிகர்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
இதேபோல் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய ரசிகர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இது குறித்து இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கூறுகையில், 'போலியான அரசியல் முடியட்டும் ஆன்மீக அரசியல் விடியட்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரவேற்கத்தக்கது. தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு அருள் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் ஆன்மீக அரசியல் மலருவதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அவருக்கு உறுதுணையாக இந்து மக்கள் கட்சி இருக்கும்' என்றார்.
கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் கதிர்வேல் பேசுகையில், '35 ஆண்டுகள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் ஏற்படும். இன்றையை அரசியல் நிலையின் தன்மையை காவல்படையின் மூலம் இந்த தேசத்திற்கு மீண்டும் விடுதலை பெற்று தருவார்.
ஆன்மீக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியல் அல்ல. தெய்வீக , தெய்வ நம்பிக்கையுடைய அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட உதவியாக இருக்கும். தெய்வத்தால் நாடு தூய்மை அடையும், தெய்வம் போன்ற மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்' என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
சுமார் 22 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிக்கட்சி துவங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னதாக வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற கொடியுடன் ஊர்வலமாக வந்த ரசிகர்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
இதேபோல் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய ரசிகர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இது குறித்து இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கூறுகையில், 'போலியான அரசியல் முடியட்டும் ஆன்மீக அரசியல் விடியட்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரவேற்கத்தக்கது. தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு அருள் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் ஆன்மீக அரசியல் மலருவதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அவருக்கு உறுதுணையாக இந்து மக்கள் கட்சி இருக்கும்' என்றார்.
கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் கதிர்வேல் பேசுகையில், '35 ஆண்டுகள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் ஏற்படும். இன்றையை அரசியல் நிலையின் தன்மையை காவல்படையின் மூலம் இந்த தேசத்திற்கு மீண்டும் விடுதலை பெற்று தருவார்.
ஆன்மீக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியல் அல்ல. தெய்வீக , தெய்வ நம்பிக்கையுடைய அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட உதவியாக இருக்கும். தெய்வத்தால் நாடு தூய்மை அடையும், தெய்வம் போன்ற மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்' என்றார்.