ரஜினியின் அரசியல் 'எண்ட்ரி': கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கோவை, டிசம்பர் 31

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சுமார் 22 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த்  அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிக்கட்சி துவங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.

முன்னதாக வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற கொடியுடன்  ஊர்வலமாக வந்த ரசிகர்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய ரசிகர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இது குறித்து இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கூறுகையில், 'போலியான அரசியல்  முடியட்டும் ஆன்மீக அரசியல் விடியட்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரவேற்கத்தக்கது.  தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு அருள் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். 

மேலும் ஆன்மீக அரசியல் மலருவதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அவருக்கு உறுதுணையாக இந்து மக்கள் கட்சி இருக்கும்' என்றார்.

கோவை மாவட்ட ரசிகர் மன்ற  தலைவர் கதிர்வேல் பேசுகையில், '35 ஆண்டுகள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் ஏற்படும். இன்றையை அரசியல் நிலையின் தன்மையை காவல்படையின் மூலம் இந்த தேசத்திற்கு மீண்டும் விடுதலை பெற்று தருவார். 

ஆன்மீக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியல் அல்ல. தெய்வீக , தெய்வ நம்பிக்கையுடைய அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட  உதவியாக இருக்கும். தெய்வத்தால் நாடு தூய்மை அடையும், தெய்வம் போன்ற மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்' என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...