குற்றங்கள்....! விபத்துகள்....! புள்ளிவிவரங்களை வெளியிட்டார் காவல் ஆணையர்


கோவை, டிசம்பர் 31

புத்தாண்டு நாளை தொடங்கவுள்ள நிலையில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த குற்றம் மற்றும் விபத்து சம்பவங்கள் குறித்த புள்ளி விவரங்களைக் கோவை காவல் ஆணையர் கே. பெரியய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அவர் கூறுகையில்,  2017-ம் ஆண்டைப் பொருத்தவரை கோவை மாநகர காவல்துறையின் தொடர் ரோந்து மற்றும் குற்றதடுப்பு பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டப்பட்டதன் விளைவாக கொடுங்குற்றங்களான ஆதாய கொலை, கூட்டுக்கொள்ளை போன்றே குற்றங்கள் மாநகரில் நடைபெறவில்லையெனினும் வருட இறுதியில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஒருவாரத்திற்குள் வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு துப்பு துலங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவை மாநகருக்குள் வருவதற்கு, தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பாலக்காடு சாலை போன்ற 7 சாலைகள் உள்ளன. கோவையில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து சாலைகளிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டும், தடுப்புகளை அமைத்து வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை இனி தொடர்ந்து நடைபெறும். 

கோவை மாநகரில் தங்கி பணிபுரியும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படம், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் போலீஸாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

கோவை மாநகரில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் விபத்து வழக்குளின் விபரங்கள் :

நடந்த ஆதாய கொள்ளை சம்பவங்களில் களவுபோன சொத்துகள் சுமார் ரூ. 3,62,39,249 மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன. 

கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக 25 கொலை வழக்குகளும், காய வழக்குகள் (அற்ப + கொடுங்காயங்கள்) பொறுத்தமட்டிர்ல 258 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கலக வழக்குகளைப் பொறுத்தவரையில் 37 வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவை மாநகரில் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நகரில் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்சனை விளைவித்ததாக 67 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாலை விதிகளை மீறியதால், 1,377 சாலைவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 

சாலைவிதிமுறை மீறல்களுக்காக 4,11,366 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 6,20,21,665 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இதுவரை 302 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை மாநகரில் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் விபத்து வழக்குளின் விபரங்கள் :

ஆதாய கொள்ளை சம்பவங்களில் 81 சதவீதம் வழக்குகள் துப்புதுலக்கப்பட்டு அவற்றில் 85 சதவீதம் களவுபோன சொத்துகள் சுமார் ரூ. 5,20,00,000 மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 9 சதவீதம் வழக்குகள் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டும், 8 சதவீதம் கூடுதலாக களவு போன பொதுமக்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் நிகழ்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக 22 கொலை வழக்குகளும், காய வழக்குகள் (அற்ப + கொடுங்காயங்கள்) பொறுத்தமட்டில் 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையில்  4 வழக்குகள் குறைவாகியுள்ளது. 

கலக வழக்குகளைப் பொறுத்தவரையில் 13 வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைச் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 35 வழக்குகள் குறைவானதாகும். 

கோவை மாநகரில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 குறைவான சம்பவங்களாகும்.

நகரில் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்சனை விளைவித்ததாக 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 அதிகமாகும். 

சாலை விதிகளை தீவிர முறையில் அமல்படுத்தப்பட்டதில் 2017-ம் ஆண்டு 1,294 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83 விபத்துக்கள் குறைந்துள்ளது. 

சாலைவிதிமுறை மீறல்களுக்காக 5,27,504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், ரூ. 8,02,17,304 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1,16,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் அபராதமாக ரூ. 1,81,95,639 வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் இந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இதுவரை 302 பேர் பலியாகியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 2,500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. (ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து என்ற சட்டம் 2017-ல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது).

மேலும், சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கி 2017 ஜனவரி மாதம் வரை, இந்து முன்னணி பிரமுகர் கொலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள், பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு அனைத்திலும் சீரிய கவனத்துடன் செயல்பட்டதில், மாநகரில் பொது அமைதியானது பாதுகாக்கப்பட்டுள்ளது. 

வரும் புத்தாண்டில் கோவை மாநகர காவல்துறையினரின் பணியானது, சீரிய முறையில் தொடரும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

காவல் ஆணையர் கே. பெரியசாமி தலைமையில் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், துணை ஆணையர்கள் பெருமாள் (குற்றப்பிரிவு), லட்சுமி (சட்டம்,ஒழுங்கு), சுஜித்குமார் (போக்குவரத்து) மற்றும் தர்மராஜ் (மத்திய) ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...