புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிக் கொண்டாட்டம் தொடர்பான காவல்துறையின் அறிவுரைகளும், விதிமுறைகளும்.....


கோவை, டிசம்பர் 31

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பான கோவை மாநகரக் காவல்துறையினரின் அறிவுரைகள் பின்வருமாறு :-

1) பொதுமக்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுநல் கூடாது

2) மதுகுடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது உட்படஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

3) புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது

4) பொதுஇடங்களில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது

5) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் மற்றும் குறும்பான செயல்களைச் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

6) அனுமதிக்கப்பட்ட ஓட்டல் பார்கள், மதுபானக்கடைகளை குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மேலாக செயல்பட அனுமியில்லை. மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

7) உணவகங்கள், பேக்கரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் திறந்திருக்கக்கூடாது.

8) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.,1) அதிகாலை 3 மணிவரை புதிதாக திறக்கப்பட்டுள்ள டாக்டர் நஞ்சப்பா சாலை மேம்பாலம் உள்பட அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் மற்றும் சுங்கம், உக்கடம் பைபாஸ் மேம்பாலங்களில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பாக லாட்ஜ், வணிக வளாகங்கள், கிளப் மற்றும் விடுதிகள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் :-

1) புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் காவல்துறையின் முன் அனுமதிபெற்றே நடத்தப்பட வேண்டும். 

2) புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களில் மேடைகளுக்கு தாங்கும்திறன் சான்றிதழ், மின்சாதனங்கள் குறித்த சான்றிதழ், தீயணைப்புத்துறை சான்றிதழ்கள் முன்னரே பெறப்பட வேண்டும். 

3) அவசரகால வழிகள் இருத்தல் வேண்டும். 

4) ஆபாச நடனங்கள் மற்றும் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

5) வானவேடிக்கைகள் உரிய அனுமதியின்றி நடத்தக்கூடாது. 

6) நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். 

7) புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி கருவிகள், 45 ஒலிஅளவிற்கு மேலாக இருத்தல் கூடாது.

8) புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்களை அவர்களுடைய இடத்திற்குக் கொண்டுசென்று சேர்ப்பது நிகழ்ச்சி நடத்துபவர்களின் பொறுப்பாகும். 

9) தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் கூடாது.

10) புத்தாண்டு என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும், யாருக்கும் வழங்கப்படமாட்டாது. சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி புத்தாண்டு தின கொண்டாட்டங்களை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் சாலை விதிகளை மதித்தும் விபத்தில்லாத, குற்றமில்லாத, மகிழ்ச்சியான, பாதுகாப்பான புத்தாண்டு தினமாகக் கொண்டாட காவல்துறையின் நல்வாழ்த்துக்கள்.

பொதுமக்கள் காவல்துறையின் வேண்டுகோளின்படி நடந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...