கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, டிசம்பர் 30
கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த 26 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனஅழுத்தம் காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில், இவர் சிறையில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கோவை மத்திய சிறையில் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த 26 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனஅழுத்தம் காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில், இவர் சிறையில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கோவை மத்திய சிறையில் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.