கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனி நிலவுவதால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 30
கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனி நிலவுவதால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனியால் நகரம் எங்கும் வெள்ளி போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது. அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால், அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், கடும் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டி தங்களை காத்துக் கொள்கின்றனர். தற்போது, கொடைக்கானலில் உறைபனி நிலவுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.