குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றுவது குறித்து 22-வது வார்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.

கோவை, டிசம்பர் 29

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார். அவர், வீடுவீடாக சென்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய யூனியன் உதவியுடன் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டில் சூன்யா திட்டம் 3 வருடங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தரம் பிரித்து பெறப்பட்டு, சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பு, கோவை மாநகராட்சியில் கெபாசிடீஸ் திட்டத்தின் கீழ் ஐசிஎல்இஐ (ICLEI) உடன் இணைந்து சூன்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தற்பொழுது 22 மற்றும் 24-வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுப்பது பற்றி விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு திட்டம் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். தரம் பிரித்து சேகரிக்கும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இந்த வார்டுகளில் உள்ள குப்பை தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு, குப்பைத் தொட்டிகள் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும். 

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...