குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றுவது குறித்து 22-வது வார்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.

கோவை, டிசம்பர் 29

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார். அவர், வீடுவீடாக சென்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய யூனியன் உதவியுடன் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டில் சூன்யா திட்டம் 3 வருடங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தரம் பிரித்து பெறப்பட்டு, சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பு, கோவை மாநகராட்சியில் கெபாசிடீஸ் திட்டத்தின் கீழ் ஐசிஎல்இஐ (ICLEI) உடன் இணைந்து சூன்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தற்பொழுது 22 மற்றும் 24-வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுப்பது பற்றி விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு திட்டம் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். தரம் பிரித்து சேகரிக்கும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இந்த வார்டுகளில் உள்ள குப்பை தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு, குப்பைத் தொட்டிகள் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும். 

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...