தமிழ் புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை, டிசம்பர் 29

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டாடுவது என மாநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன் தலைமையில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். 

இந்தச் செயற்குழு கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் மிகச் சிறப்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வது, இந்த இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் செயலற்று கிடந்ததை வன்மையாகக் கண்டிப்பது, வருகின்ற தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை மாவட்டம் முழுவதும் கழகக் கொடியை கட்டி அனைத்து வட்டங்களிலும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல பகுதிகளில் பூங்காக்கள் பராமரிப்பு, சாலைகளை மேம்படுத்துதல், எரியாத 10 ஆயிரம் மின் விளக்குகளை சரிசெய்தல், இருகூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாதது போன்ற பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவது, கோவை மாநகராட்சி பகுதியில் உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும், கோவை மாவட்டம் முழுவதும், ஏழை - எளிய குடும்பங்களை சேர்ந்த வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்ற முதியவர்கள், கணவனை இழந்தவர்களுக்கு, மாற்று திறனாளிகள், முதியோர் என அரசின் உதவி தொகைகள் வழங்காமல் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் செயற்குழு கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சிங்கை ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஷ்வரி, பகுதி கழக செயலாளர்கள் சுந்தரம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள், தளபதி இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...