கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசை வாகன பதிவு தொடக்கம்

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

கோவை, டிசம்பர் 29

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழக வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும்.

கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு பகுதிக்கு TN-37, கோவை வடக்கு பகுதிக்கு TN-38, கோவை மேற்கு பகுதிக்கு TN-39, மேட்டுப்பாளையத்திற்கு TN-40, பொள்ளாச்சிக்கு TN-41 ஆகிய எண்களின் அடிப்படையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. தற்போது, பேன்ஸி எண்களைத் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு பிராந்திய போக்குவரத்து அலுவலகம் முதன் முதலில் ”D” வாகனங்களைப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...