கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசை வாகன பதிவு தொடக்கம்

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

கோவை, டிசம்பர் 29

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழக வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும்.

கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு பகுதிக்கு TN-37, கோவை வடக்கு பகுதிக்கு TN-38, கோவை மேற்கு பகுதிக்கு TN-39, மேட்டுப்பாளையத்திற்கு TN-40, பொள்ளாச்சிக்கு TN-41 ஆகிய எண்களின் அடிப்படையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. தற்போது, பேன்ஸி எண்களைத் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு பிராந்திய போக்குவரத்து அலுவலகம் முதன் முதலில் ”D” வாகனங்களைப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...