கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை

திருப்பூர் அருகே கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர், டிசம்பர் 29

திருப்பூர் அருகே கணவன் மனைவி கொடூரமாக வெட்டி கொலை. தப்பி ஓடிய  கொலையாளிகளுக்கு போலீஸ் வலை விச்சு. 

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் கொடுவாய் சாலையில் குடியிருந்து வந்தவர் முத்துகுமாரசாமி 70 வயது. விவசாயியான இவர் தனது  மனைவி தெய்வாத்தாளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 



நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் முத்துகுமாரசாமி வீட்டின் கதவு திறந்துகிடந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் உள்ள சமையல் அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மனைவி தெய்வாத்தாள் வீட்டின் பக்கவாட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

இச்சமவம் குறித்து உடனடியாக ரோந்து சென்ற போலீசார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இரவு வழக்கம் போல் உறங்க செல்லும் முன் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால்  தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை வரை ஓடி நின்றது. இதனை அடுத்து அங்கு தங்கி இருந்த வட மாநில இளைஞரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...