கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை

திருப்பூர் அருகே கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர், டிசம்பர் 29

திருப்பூர் அருகே கணவன் மனைவி கொடூரமாக வெட்டி கொலை. தப்பி ஓடிய  கொலையாளிகளுக்கு போலீஸ் வலை விச்சு. 

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் கொடுவாய் சாலையில் குடியிருந்து வந்தவர் முத்துகுமாரசாமி 70 வயது. விவசாயியான இவர் தனது  மனைவி தெய்வாத்தாளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 



நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் முத்துகுமாரசாமி வீட்டின் கதவு திறந்துகிடந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் உள்ள சமையல் அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மனைவி தெய்வாத்தாள் வீட்டின் பக்கவாட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

இச்சமவம் குறித்து உடனடியாக ரோந்து சென்ற போலீசார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இரவு வழக்கம் போல் உறங்க செல்லும் முன் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால்  தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை வரை ஓடி நின்றது. இதனை அடுத்து அங்கு தங்கி இருந்த வட மாநில இளைஞரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...