குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


வால்பாறை, டிசம்பர் 28

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து வருகிறது. யானைகள், இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதும் குடியிருப்புகளை இடிப்பதும், ரேசன் கடைகளை சூறையாடுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இந்நிலையில், சோலையார் முதல் டிவிசனில் இன்று வழக்கம் போல் தோட்டத் தொழிலாளர்கள் காலை 7.55 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பீல்டு எண் 8-ல் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை பணிக்கு சென்று கொண்டிருந்த அழகம்மாள் (52) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சேகர், விஜயன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சோலையார் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சின்கோனா, நீரார்டேம், பன்னிமேடு, பாரளை போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...