இமயமலையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ கோவையில் பூத்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோவை, டிசம்பர் 28
இமயமலையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ கோவையில் பூத்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கேக்டஸ் எனப்படும் வகை செடிகள் தண்ணீர் மிகக்குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மையுடையவை. குளிர் அதிகம் உள்ள இமயமலை போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற பல்வேறு வகையான கேக்டஸ் செடிகள் உள்ளன. இவற்றுள் ஒன்று பிரம்ம கமலம் என அழைக்கப்படும் நிஷாகந்தி பூவாகும். தற்போது, பரவலாக பல்வேறு இடங்களிலும் இந்த வகைசச் செடிகள் அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
கோவை கவுண்டம்பாளையம் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னதேவி என்பவர் அத்தகைய ஒரு செடியை கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் இரவில் மட்டுமே பூக்கும் இந்த செடியில் பூ ஒன்று பூத்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மன் படுத்திருக்கும் போது நாகம் ஒன்று படமெடுக்கும் நிலையில், இந்த பூவின் நடுப்பாகம் அமைந்திருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.