நாடு முழுவதும் ஜன.,7-ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது: தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


டிசம்பர் 28

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் பட்டய மேற்படிப்பிலும் (டிப்ளமோ) 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் நீட் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு இணையம் மூலம் வரும் ஜனவரி 7-ம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...