கோவை, டிசம்பர் 27
கோவையில் 75 வயது முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு பகுதியை அடுத்த ஆர்.ஜி. புதூர் பகுதியை சேர்ந்தவர் காளிக்குட்டி கவுண்ட (75). இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளிகுட்டி-யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தோட்ட செலவுக்காக காளிக்குட்டி கையில் எப்போதும் பணம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 75 வயது முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு பகுதியை அடுத்த ஆர்.ஜி. புதூர் பகுதியை சேர்ந்தவர் காளிக்குட்டி கவுண்ட (75). இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளிகுட்டி-யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தோட்ட செலவுக்காக காளிக்குட்டி கையில் எப்போதும் பணம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.