டிச., 31-ம் தேதி நள்ளிரவு இந்து கோவில்களை திறக்க தடை வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டிசம்பர் 27

ஆங்கில புத்தாண்டையொட்டி, இந்து கோவில்களை நள்ளிரவில் திறந்து பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வத்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ந்தேதி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது வாடிக்கையானது. சில கோவில்களில் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு நடை திறக்கப்பட்டு பூஜை நடத்துவது வழக்கம். ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் அதனை ஒரு விழாவைப் போல கொண்டாடுவது ஆகியவை இந்தியாவின் வேத கலாச்சாரம் கிடையாது. தெலுங்கு வருடப்பிறப்புதான் பொருத்தமான, சிறந்த கலாச்சாரம் ஆகும் என ஆந்திராவில் உள்ள கோவில்களில் புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு கூறியது.

எனவே, ஆகம விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கோவில் நடையைத் திறக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...