டிச., 31-ம் தேதி நள்ளிரவு இந்து கோவில்களை திறக்க தடை வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டிசம்பர் 27

ஆங்கில புத்தாண்டையொட்டி, இந்து கோவில்களை நள்ளிரவில் திறந்து பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வத்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ந்தேதி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது வாடிக்கையானது. சில கோவில்களில் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு நடை திறக்கப்பட்டு பூஜை நடத்துவது வழக்கம். ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் அதனை ஒரு விழாவைப் போல கொண்டாடுவது ஆகியவை இந்தியாவின் வேத கலாச்சாரம் கிடையாது. தெலுங்கு வருடப்பிறப்புதான் பொருத்தமான, சிறந்த கலாச்சாரம் ஆகும் என ஆந்திராவில் உள்ள கோவில்களில் புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு கூறியது.

எனவே, ஆகம விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கோவில் நடையைத் திறக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...