கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம்

கோவை, டிசம்பர் 27

திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். 

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார். 

அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். 

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...