ஒகி புயலால் தமிழக மீனவர்கள் 400 பேர் மாயம் : மாநில வாரியாக விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு

டிசம்பர் 27

ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 400 பேர் மாயமானதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கிய மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், டிசம்பர் 15 வரை 400 தமிழக மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், டிசம்பர் 20 வரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மதுரை உய கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் டிசம்பர் 22ம் தேதியன்று தமிழக அரசு அளித்த பதிலில், ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் 271 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 23-ம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 275 தமிழக மீனவர்கள் மாயமாகி இருப்பதாகக் கூறினார்.

மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு இடையே முரண்பாடு நிலவு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக மத்திய அரசு இன்று புதிய புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டிருப்பதாவது :

டிசம்பர் 15 வரை மாயமான மீனவர்கள் : 

தமிழகம் - 400, கேரளா - 261, லட்சத் தீவுகள் - 0 மொத்தம் : 661

டிசம்பர் 20 வரை மீட்கப்பட்ட மீனவர்கள் விபரம் : தமிழகம் - 453, கேரளா - 362, லட்சத்தீவுகள் - 30. மொத்தம் - 845

மேலும், எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மாயமான மற்றும் மீட்கப்பட்ட மீனவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தர வேண்டிய பொறுப்பு தமிழக மீன்வளத்துறைக்கு உள்ளது எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...