இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜெய்ராம் தாகூர்

டிசம்பர் 27

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக வென்றது. 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தூமல் தேர்தலில் தோல்வியடைந்ததால், புதிய முதலமைச்சராக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச முதலமைச்சராக அவர் இன்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தாகூருடன் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. 

அமைச்சர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

சுரேஷ் பரத்வாஜ், ராஜீவ் பிண்டால், ராஜீவ் சேஜல், கோவிந்த் தாகூர், மகேந்தர் சிங், அனில் சர்மா, கிஷன் கபூர், விபின் பார்மர், சர்வீன் சௌத்ரி, விரேந்தர் கன்வார், ராம் லால் மார்கண்டே, விக்ரம் ஜெய்யால், ராஜேந்தர் கார்க், கமலேஷ் குமாரி, இண்டர் சிங் பால்வீர் வர்மா, விக்ரம் தாகூர். சபாநாயகராக ரமேஷ் தவால்லாம், துணை சபாநாயகராக ஹன்ஸ் ராஜ் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் சட்டசபைக்கு 5-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமையப் பெற்ற பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...