இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜெய்ராம் தாகூர்

டிசம்பர் 27

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக வென்றது. 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தூமல் தேர்தலில் தோல்வியடைந்ததால், புதிய முதலமைச்சராக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச முதலமைச்சராக அவர் இன்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தாகூருடன் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. 

அமைச்சர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

சுரேஷ் பரத்வாஜ், ராஜீவ் பிண்டால், ராஜீவ் சேஜல், கோவிந்த் தாகூர், மகேந்தர் சிங், அனில் சர்மா, கிஷன் கபூர், விபின் பார்மர், சர்வீன் சௌத்ரி, விரேந்தர் கன்வார், ராம் லால் மார்கண்டே, விக்ரம் ஜெய்யால், ராஜேந்தர் கார்க், கமலேஷ் குமாரி, இண்டர் சிங் பால்வீர் வர்மா, விக்ரம் தாகூர். சபாநாயகராக ரமேஷ் தவால்லாம், துணை சபாநாயகராக ஹன்ஸ் ராஜ் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் சட்டசபைக்கு 5-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமையப் பெற்ற பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...