உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி போக்குவரத்து மாற்றம்

டிசம்பர் 26

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதகை நகரில் சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் வரும் 30-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உதகை நகரில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

கூடலூர் மற்றும் மசினகுடி ஆகிய இடங்களில் இருந்து தலைகுந்தா வந்தடையும் அனைத்து வாகனங்களும் தலைகுந்தா மட்டம், குளிச்சோலை, கோழிப்பண்ணை, மார்லிமந்து, புதுமந்து வழியாக ஸ்டீபன் சர்ச் வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் இருந்து நூற்றாண்டு விழா பந்தல் மேடைக்கு வரவுள்ள பயனாளிகளும், கட்சி பிரமுகர்களும் பிங்கர்போஸ்ட், காந்தல் முக்கோணம், கஸ்தூரி பாய் காலனி, மினிபோட் ஹவுஸ், குட்ஷெப்பர்ட் பள்ளி, பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் வழியாக எட்டின்ஸ் ஜங்ஷன், முருகன் லாட்ஜ் நுழைவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குன்னூர் பகுதியில் இருந்து வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும் லவ்டேல் ஜங்ஷனில் இருந்து காந்திபேட்டை, மஞ்சனக்கொரை வழியாக எமரால்டு சாலை வந்தடைந்து, பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் ஜங்ஷன் வழியாக முருகன் லாட்ஜ் நுழைவுவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மஞ்சூர் பகுதியில் இருந்து வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும், பைகமந்து வழியாக முத்தொரை, பாலாடா வந்து பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் ஜங்ஷன் மார்க்கமாக முருகன் லாட்ஜ் நுழைவுவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோத்தகிரி தொட்டபெட்டா வழியாக வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும் சேரிங்கிராஸ், கமர்ஷியல் ரோடு, காபி ஹவுஸ், மணிக்கூண்டு ஏடீசி வந்தடைந்து ஏடிசி ஜங்ஷன் வழியாக உள்ள நுழைவு வாயில் வழியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நிகழ்ச்சி பந்தல் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி ஏற்பாடுகள் வரும் 30-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், நகரில் உள்ள எந்த ஒரு பகுதியிலும் ஆட்டோக்கள், டாக்ஸிகள், வேன்கள், பேருந்துகள், லாரிகள் ஆகியவை எந்தவொரு பகுதியிலும் நிறுத்த அனுமதிக்கப்படாது. உள்ளூர் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களைத் தெரிந்து வாகன நெரிசலைக் குறைப்பதற்கு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...