குஜராத்தில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது: முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் பொறுப்பேற்பு

டிசம்பர் 26

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும். துணை முதலமைச்சராக நிதின் படேலும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22–ந்தேதி நடந்தது. இதில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் மறுநாள் மாநில ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்த பாஜக தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு ஆளுநரும் அழைப்பு விடுத்தார். அதன்படி, குஜராத்தில் புதிய அரசு இன்று பதவியேற்றது.  மாநில தலைமை செயலகம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...