பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் பலி


திருப்பூர், டிசம்பர் 26

திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே பழணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர்- 3 ஆண்  3 பெண் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று பாதயாத்திரையாக பக்தர்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் தாராபுரத்திற்கு முன்பாக சூர்யநல்லூரை அடுத்த புதிவிநாயகர் கோயில் அருகே பக்தர்கள் நடந்துசென்றுகொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் நடராஜன்,பரமேஸ்வரி,விஜயா, காளிமுத்து,  ராஜாமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சாந்தி என்பரை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்துபோனார். 

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி பலியான 5 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி பக்தர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...