அரசியல் நிலைப்பாடு குறித்து டிச.31 அறிவிப்பேன்- நடிகர் ரஜினி

டிசம்பர் 26

போரில் வெற்றிபெற பலத்தை விட வியூகம் முக்கியம் எனவும், அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று அறிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினி காந்த் தனது ரசிகர்களிடையே தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2-வது கட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை சமீபத்தில் அவரது தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று (டிச.26) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நாளை (டிசம்பர் 27) திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள், 28-ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்கள், 29-ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள், 30, 31 தேதிகளில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் 31ம் தேதியன்று தெரிவிப்பேன் என ரசிகர்கள் மத்தியில் இன்று அவர் பேசுகையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காலா படப்பிடிப்பு காரணமாக சந்திப்பு தாமதமானது. நான் நடித்த முள்ளும் மலரும் படத்தை பார்த்த பிறகு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

அரசியல் விஷயமாக என்ன சொல்லப்போகிறேன் என்பதை குறித்து தெரிந்து கொள்ள மக்களை விட ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. போர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தலா? அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்.

போருக்குச் சென்றால் ஜெயிக்க வேண்டும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது, வியூகம் முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதியன்று அறிவிக்க உள்ளேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...