ஆர்.கே. நகரில் வெற்றிவாகை சூடினார் தினகரன் !


டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு பரபரப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று 40.707 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினை பெற்றார். இதற்கு அடுத்தபடியாக மதுசூதனன் (அதிமுக) 48,306 வாக்குகளும், மருதுகணேஷ் (திமுக) 24,651 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக, பாஜக உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக 1417 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அதனை விட நோட்டா அதிக வாக்கினை அதாவது 2323 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...