டிசம்பர் 24
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்து விடும் என்று மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எங்கள் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துவிட்டனர்.
3 மாதத்தில் ஆட்சி கவிழப் போகிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 7.5 கோடி மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்து விடும் என்று மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எங்கள் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துவிட்டனர்.
3 மாதத்தில் ஆட்சி கவிழப் போகிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 7.5 கோடி மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.