கோவை, டிசம்பர் 24
எம்.ஜி.ஆரின் 30 வது நினைவு தினம் கோவை மாவட்ட அதிமுக அலுவகத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதில் அதிமுகவை சேர்ந்த கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதியை சார்ந்த எம்.எல்.ஏக்களான பி.ஆர்.ஜி. அருன்குமார் மற்றும் அம்மன் கே. அர்ஜூனன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அதிமுக தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.