ஆர்.கே. நகரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தினகரன் !

டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை ஆர்.கே. நகரின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புக்கு இடையே ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்.கே. நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் டி.டி.வி. தினகரன் - 5,339, அதிமுக மதுசூதனன் - 2738, திமுக மருது கணேஷ் - 1181, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 258, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 66 என வாக்குகள் பெற்றனர். 

பின் இரண்டாம் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் - 10421, அதிமுக மதுசூதனன் - 4521, திமுக மருது கணேஷ் - 2324, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றனர்.

மூன்றாம் சுற்று முடிவில் தினகரன் - 15,868, அதிமுக மதுசூதனன் - 7,033, திமுக மருது கணேஷ் - 3,750, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றுள்ளனர்.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தற்போது நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...