டிசம்பர் 24
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் உள்ளிட்டு 59 வாக்காளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 77.5 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அடுத்த நிலை வகித்து வருகின்றனர்.
இதனிடையே, நோட்டா-விற்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் 66 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தினை வகித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் உள்ளிட்டு 59 வாக்காளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 77.5 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அடுத்த நிலை வகித்து வருகின்றனர்.
இதனிடையே, நோட்டா-விற்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் 66 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தினை வகித்து வருகிறார்.