ஆர்.கே.நகர்: பாஜக-வை மிஞ்சும் நோட்டா வாக்குகள்

டிசம்பர் 24

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் உள்ளிட்டு 59 வாக்காளர்கள் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தலில் மொத்தம் 77.5 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அடுத்த நிலை வகித்து வருகின்றனர்.

இதனிடையே, நோட்டா-விற்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் 66 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தினை வகித்து வருகிறார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...