கோவை, டிசம்பர் 24
அகில இந்திய போலீஸ் பேட்மிண்டன் போட்டியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது
அகில இந்திய அளவில் காவல்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பேட்மிண்டன் கோப்பைக்கான போட்டி 10-வது ஆண்டாக நடைபெற்றது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் ஏ.டி.ஜி.பி. M. ரவி ஆகியோர் ஓர் அணியாக இணைந்து விளையாடினர்.
இந்த விளையாட்டுப் போட்டியில் எதிர்த்து போட்டியிட்ட அணிகளை வீழ்த்தி கோவை மாநகர காவல் ஆணையர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டது
இந்த பரிசை தெற்கு கடற்படையின் துணை தலைவர் A.R.கார்வே வழங்கி கவுரவித்தார்.
அகில இந்திய போலீஸ் பேட்மிண்டன் போட்டியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது
அகில இந்திய அளவில் காவல்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பேட்மிண்டன் கோப்பைக்கான போட்டி 10-வது ஆண்டாக நடைபெற்றது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் ஏ.டி.ஜி.பி. M. ரவி ஆகியோர் ஓர் அணியாக இணைந்து விளையாடினர்.
இந்த விளையாட்டுப் போட்டியில் எதிர்த்து போட்டியிட்ட அணிகளை வீழ்த்தி கோவை மாநகர காவல் ஆணையர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டது
இந்த பரிசை தெற்கு கடற்படையின் துணை தலைவர் A.R.கார்வே வழங்கி கவுரவித்தார்.