கோவை, டிசம்பர் 23
ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.