பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரரின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 23

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்‌ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...