பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரரின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 23

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்‌ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...