இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவை, டிசம்பர் 23

கோவையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி, கிறிஸ்துவர்கள் இல்லங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மற்றும் சான்டாகிளஸ் போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள பாப்பிஸ் ஹோட்டல், டிரீம் ஃப்ளவர் ஈவென்ட்சுடன் இணைந்து மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். சுமார் ஒரு வார காலத்தில் 1.2 டன் எடையுடைய 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை 30 பேர் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர். மின் விளக்குகள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்புடைய பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது.



இது தொடர்பாக, பாப்பிஸ் ஹோட்டல் குழுமம் செயற்பாட்டு மேலாளர் ஜெயராமன் கூறுகையில், திட்டமிடல் முதல் வரைதல் மற்றும் மரத்தை உருவாக்குதல் வரை எங்கள் அணி படிப்படியாக வேலை செய்தது. கோவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும், கின்னஸ் உலக சாதனைப் பதிவில் எங்களது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த முயற்சி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னர், மும்பையின் வர்லி நகரில் உள்ள ஒரு தனியார் சமுதாயம் 56 அடியிலும், 2014-ம் ஆண்டில் ஷாப்பர் ஸ்டாப் லிமிடெட் 40 அடி உயரத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியிருந்தன. தற்போது, இந்தச் சாதனைகளை பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் உடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரம் இன்று முதல் ஜனவரி 2, 2018 வரை பாப்பிஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...