இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவை, டிசம்பர் 23

கோவையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி, கிறிஸ்துவர்கள் இல்லங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மற்றும் சான்டாகிளஸ் போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள பாப்பிஸ் ஹோட்டல், டிரீம் ஃப்ளவர் ஈவென்ட்சுடன் இணைந்து மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். சுமார் ஒரு வார காலத்தில் 1.2 டன் எடையுடைய 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை 30 பேர் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர். மின் விளக்குகள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்புடைய பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது.



இது தொடர்பாக, பாப்பிஸ் ஹோட்டல் குழுமம் செயற்பாட்டு மேலாளர் ஜெயராமன் கூறுகையில், திட்டமிடல் முதல் வரைதல் மற்றும் மரத்தை உருவாக்குதல் வரை எங்கள் அணி படிப்படியாக வேலை செய்தது. கோவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும், கின்னஸ் உலக சாதனைப் பதிவில் எங்களது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த முயற்சி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னர், மும்பையின் வர்லி நகரில் உள்ள ஒரு தனியார் சமுதாயம் 56 அடியிலும், 2014-ம் ஆண்டில் ஷாப்பர் ஸ்டாப் லிமிடெட் 40 அடி உயரத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியிருந்தன. தற்போது, இந்தச் சாதனைகளை பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் உடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரம் இன்று முதல் ஜனவரி 2, 2018 வரை பாப்பிஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...